November 20, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025-2026 தொடக்கம்

by sowmiarajan
November 15, 2025
in News
A A
0
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025-2026 தொடக்கம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025-2026 மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து “எல்லோருக்கும் எல்லாம்” என்ற வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

திட்டத்தின் நோக்கம்: தமிழ்நாடு அரசின் மூலம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருடந்தோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் வாயிலாகக் கிராமப்புற மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். மிதிவண்டியின் மதிப்பு: ஒரு மாணவருக்கு வழங்கப்படும் மிதிவண்டியின் விலை ரூ.4,375/– என்றும், ஒரு மாணவிக்கு வழங்கப்படும் மிதிவண்டியின் விலை ரூ.4,250/– என்றும் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நடப்பு கல்வியாண்டில் (2025-2026) திண்டுக்கல் மாவட்டத்தில் 7,604 மாணவர்களுக்கும், 9,322 மாணவியர்களுக்கும் என மொத்தம் 16,936 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.28 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முதல் கட்ட துவக்கம்: இன்றை தினம் முதல் கட்டமாக, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 35 மாணவர்களுக்கு ரூ.1,53,125/– மதிப்பீட்டிலும் மற்றும் 27 மாணவியர்களுக்கு ரூ.1,14,750/– மதிப்பீட்டிலும் என மொத்தம் 62 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2,67,875/– மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ஆத்தூர் தொகுதியில் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அமைச்சர் பட்டியலிட்டார்:

ஆத்தூர், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டையில் உள்ள பள்ளிக்குக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பது பெருமையாக உள்ளது. உயர்கல்வி வசதி: கிராமப்புற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி கற்பதற்காக ரூ.80 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவுக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. தற்போது இக்கல்லூரியில் 1400 மாணவ, மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆத்தூர், ரெட்டியார்சத்திரத்தில் 2 கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் இக்கல்லூரிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். குழந்தைகள் நேயக் கட்டடங்கள்: தமிழ்நாடு அரசின் மூலம் ரூ.2000 கோடி நிதியொதுக்கீடு பெறப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள 900 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகள் நேயக் கட்டடங்கள் கட்டப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், கிராமப்புறத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விளையாட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இறுதியாக, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 நியாயவிலைக் கடைகளுக்கு நவீனப்படுத்தப்பட்ட கைரேகை கருவியுடன் கூடிய புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், வெகு விரைவில் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.உக்ஷா, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் திருமதி பொதும்பொன்னு முரளி, துணைத் தலைவர் திரு.ஜாகீர் உசேன், சித்தையன்கோட்டை செயல் அலுவலர் திருமதி ஜெயமாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: cycle distributioneducation supporteducational assistance government supportfree bicycle schemegovernment initiative 2025 2026 programmobility scheme bicycle distributionpublic welfare education schemeschool benefit free cyclesschool studentsstudent aidstudent empowerment state initiativestudent mobilitystudent welfarewelfare benefit tamil nadu schemewelfare programyouth development
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிறப்பு தீவிர திருத்த பணியில் குளறுபடி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Next Post

பள்ளிக் கல்வித் துறை முதலமைச்சரின் இரண்டு கண்கள் பெருமிதம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 | Retro tamil

November 20, 2025
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் – பிஜேபிக்கு துணை முதல்வர் பதவி
News

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் – பிஜேபிக்கு துணை முதல்வர் பதவி

November 20, 2025
மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ
News

மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

November 19, 2025
மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு!
News

மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு!

November 19, 2025
Next Post
பள்ளிக் கல்வித் துறை முதலமைச்சரின் இரண்டு கண்கள் பெருமிதம்

பள்ளிக் கல்வித் துறை முதலமைச்சரின் இரண்டு கண்கள் பெருமிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

November 19, 2025
தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

November 19, 2025
இன்றைய ராசிபலன் – நவம்பர் 19, 2025   (புதன்கிழமை)

இன்றைய ராசிபலன் – நவம்பர் 19, 2025 (புதன்கிழமை)

November 19, 2025
“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

“சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு” : கோவையில் பிரதமர் மோடி

November 19, 2025
மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

0
மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு!

மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை

0
சாலைகளில் சாதிப் பெயர் நீக்கம்

சாலைகளில் சாதிப் பெயர் நீக்கம்

0
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் – பிஜேபிக்கு துணை முதல்வர் பதவி

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் – பிஜேபிக்கு துணை முதல்வர் பதவி

November 20, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 | Retro tamil

November 20, 2025
மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

November 19, 2025
மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு!

மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு!

November 19, 2025

Recent News

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் – பிஜேபிக்கு துணை முதல்வர் பதவி

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் – பிஜேபிக்கு துணை முதல்வர் பதவி

November 20, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 | Retro tamil

November 20, 2025
மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

மதுரையை கஞ்சா போதை அதிகரித்துள்ளது”! ம.தி.மு.க. வைகோ

November 19, 2025
மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு!

மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் உயர் நீதிமன்றம் உத்தரவு!

November 19, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.