மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூநாதர் கோயிலில் நான்கு கால சிவராத்திரி பூஜையைக் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை;. பூஜையைக் காண கோயிலின் முன்பு நேரலை வசதி ஏற்பாடு:- ஆலயத்தில் நடைபெற்ற மயூர நாட்டியங்களின் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் மயில் உருவில் அம்பிகை சிவனை பூஜித்து மயில் உரு நீங்கி சிவனுடன் சேர்ந்து கௌரி தாண்டவம் ஆடிய இக்கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இரவு எட்டு மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறும் நான்கு கால பூஜைகளை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து மாயூரநாதர் கோயிலுக்கு வருகை தந்தனர். பூஜை நடக்கும் போது கோயிலில் பக்தர்கள் நெரிசலை தவிர்க்கும் வகையில் கோயிலுக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் மெகா திரையில் நான்கு கால பூஜைகளை நேரலையில் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கு பெயர் பட்ட பக்தர்கள் மயூரநாதர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டனர். மேலும் கோயிலில் நடைபெற்ற மயூர நாட்டியாஞ்சலி விழாவையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர். நாட்டியாஞ்சலி நிகழ்வில் மயூர புராணத்தையும் தில்லை சிதம்பரத்தை இணைத்து பிள்ளையும் மயிலையும் என்ற தலைப்பில் தேனியைச் சேர்ந்த ப்ரஜ்னா ஸ்கூல் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் மாணவிகளின் நடனம், மற்றும் ஓம் சிவோஹம் சிவதாண்டவ மிருத்திஞ்செய அர்ப்பணம், சைவத்திருப்பெண் மாலை, சிவார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நாட்டியங்களை அரங்கேற்றி நாட்டியக் கலைஞர்கள் சிவனுக்கு சமர்ப்பணம் செய்தனர்.
