விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி,மாவட்ட செயலாளர்கள் செஞ்சி மஸ்தான், டாக்டர் பொன்.கெளதமசிகாமணி, டாக்டர் லட்சுமணன், ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பொன்முடி கூறுகையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் சென்று தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதை எடுத்து செல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாகவும், தமிழகத்தில் மொழிக்கு, இனத்திற்கு, வரலாற்று ஏற்பட்டிருக்கிற ஆபத்தினை எடுத்துரைக்க வேண்டும்.
இந்திய புகுத்த வேண்டுமென ஒன்றிய அரசு செயல்படுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் இருக்கும் தமிழை காப்போம் தமிழ் மொழியை காப்போம் என்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்து உயிர் தியாகம் செய்த மண் தான் தமிழகம் என்றும் மொழியின் அடிப்படையிலும் நாட்டின் உணர்வின் அடிப்படையில் ஒன்றாக்க வேண்டும் என்பது தான் ஓரணியில் தமிழ்நாடு என கூறினார்.
தமிழர் வரலாற்றையே மறைக்கும் அளவிற்கு கீழடி அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட மறுப்பதாகவும் ஒன்றியத்தில் பாசீச ஆட்சியாக உள்ளது நீட் தேர்வினை கைவிட மறுப்பதாகவும், இரு மொழிக்கொள்கை தான் தமிழகத்தில் தமிழில் பயில்பவர்களுக்கு அரசு வேலை சலுகைகளை ஸ்டாலின் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகள் இல்லம் தோறும் கொண்டு செல்ல வேண்டும் எதிர்கட்சி வீடுகளாக இருந்தாலும் நான்காண்டு சாதனை எடுத்து செல்ல வேண்டும்,அண்ணா பெரியாரை இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக சேராத இடம் கண்டு சேர்ந்துள்ளதாகவும்,மொழி வாரியாகவும் இன வாரியாகவும் பிரிக்க கூடாது பாசீசத்தை உட்புகுத்த விட கூடாது என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.