விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆயுத பூஜை வழிபாடு முடிந்ததும், கட்சி தொண்டர்களுக்கு சிவி. சண்முகம் அவர்கள் பொரி, கடலை மற்றும் லட்டு உள்ளிட்ட இணைப்பு பொருள்களை அதிமுக தொண்டர்களுக்கு வழங்கி ஆயுத பூஜை வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மற்றும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் நகர செயலாளர் பசுபதி மற்றும் ராமதாஸ் உள்ளிட்ட பலர் இருந்தனர்


















