இயற்கை முறையில் செக்கு ஆலையில் எண்ணெய் தயாரிக்கும் முறையினை நேரில் பார்த்து ஆர்வத்துடன் கேட்டறிந்து பதிவு செய்த வெளிநாட்டினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்ப நல்லூர் ஊராட்சி என்.என்.சாவடி சேர்ந்தவர் விவசாயி பழனியப்பன் இவர் சொந்தமாக நிலக்கடலை பயிரிட்டு நிலக்கடலை எள் தேங்காய் இவற்றை கொள்முதல் செய்து தனக்கு சொந்தமான மர செக்கு ஆலையில் இயற்கை முறையில் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் இவற்றை தானே தயார் செய்து தானே விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் இவரது எண்ணெய் தயாரிக்கும் செக்கு ஆலைக்கு திடீரென வந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் விவசாயி பழனியப்பன் எண்ணெய் தயாரிக்கும் முறையை செய்முறைகளை கேட்டறிந்து நிலக்கடலை விவசாயம் மற்றும் எண்ணெய் தயாரிக்கும் முறைகளை வீடியோ பதிவு செய்து கொண்டனர் மேலும் விவசாயிடம் தகவல்களையும் பெற்றுக் கொண்டனர் மேலும் ஆலையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் பாரம்பரிய முறையில் மரசுக்கு ஆலையில் எண்ணெய் தயாரிக்கும் முறைகளை நேரில் பார்வையிட்டு கேட்டறிந்து வீடியோ பதிவு செய்து கொண்டனர் வெளிநாட்டினர்.
