மயிலாடுதுறையில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்ட மைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட
200பேர் கைது:-
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உறுதியளிக்கப்பட்ட 9 அம்சகோரிக்கைகளை உடனடியாக அரசாணை வெளியிடக்கோரி முழக்கமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

















