மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டபோது தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் சாலை மறியல் போராட்டம். 300க்கும் மேற்பட்டோர் கைது, தொடர்ந்து விவசாயி ஒருவர் இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினார் :-

மயிலாடுதுறையில் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டியு, ஏ.ஐ.சி.சி.டியு, ஐ.என்.டி.யு.சி, எஸ்.கே. எம் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி அன்பழகன் இந்தியில் உரையாற்றி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தார். தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 2025 ஐ கைவிட வேண்டும், தேசிய மின்சாரக் கொள்கை 2026-ஐ கைவிட வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலையை தீர்மானிக்க வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சாரம், வங்கி ரயில்வே, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மத்திய அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்ட வாறு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். போலீசார் வைத்திருந்த பேரி கார்டை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனைவரையும் தடுத்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version