தமிழகத்தில் 38வது மாவட்டதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. மன்னம்பந்தல் பகுதியில் புதிய நிரந்தரகலெக்டர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டு அனைத்துறைகளும் இங்கு இயங்கத்தொடங்கினாலும் ஒருசில துறைகளுக்கு உயர் அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் உள்ளவர்கள் பொறுப்பு அதிகாரியாக இருந்து வருகின்றனர். மேலும் புதிய எஸ்.பி.அலுவலக கட்டடம் மன்னம்பந்தல் பகுதியில் முழுவீச்சில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் 14 போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்கி வருகிறது. இதில் மயிலாடுதுறை,சீர்காழியில் தலா ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்கள், குடும்ப பிரச்னைகள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் அனைத்து மகளிர் போலீசார் வௌி பணிசுமைகளுடன் குடும்ப வழக்குகளை விசாரணை செய்யும்போது பல்வேறு முரண்பாடான பேச்சுக்களால் குடும்ப வழக்குகளில் சுமூக தீர்வு எட்டப்படாமல் கணவன், மனைவி பிரிந்து செல்லும் சூழல் அதிகரித்து வருகிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்பநல ஆலோசனை மையத்தை அமைக்க வேண்டுமென்று சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் என்பவர் இது தொடர்பான பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். வழக்கறிஞர் சங்கமித்ரன் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர். பொது பிரச்சனை, கணவன் மனைவியிடையே பிரச்சனை, பாலியல் குற்றங்கள், சாதிய வன்கொடுமை, இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு அதற்கான தீர்வையும் கண்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் மயிலாடுதுறை மவாட்டத்தில் 12 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கணவன், மனைவிக்கிடையே சிறிய பிரச்னைகள் ஏற்படும்போது அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தாள் போலீசார் விசாரணை செய்யும் போது கணவன், மனைவியை இருவரையும் கண்டித்து போலீசார் பேசும் பேச்சுக்களால் சகித்துகொள்ள முடியாமல் பிரச்னை பெரிதாக சேர்ந்து வாழாமல் கணவன், மனைவிகள் பிரிந்து செல்லும் நோக்குடன் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுகிறது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகும் சூழல் உள்ளது. 12 லட்சம் மக்கள் வசிக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப பிரச்னை தொடர்பாக சுமூக தீர்வு காண்பதற்கு குடும்பநல ஆலோசனை மைத்யதை உருவாக்க வேண்டும். அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குடும்பிரச்னைகளுக்கு சமூக தீர்வுகாணும் அளவிற்கு காவல்துறையினருக்கு இல்லை. கணவன், மனைவி பிரச்னைகளை பேசி தீர்க்கும் நிலையை உருவாக்க குடும்பநல ஆலோசனை மையத்தை உருவாக்க கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

















