திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நகர செயலாளர் வாரை. பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவாரூர் பிப்,03-பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை முன்னிட்டு திருவாரூர் திமுக நகர கழக அலுவலகம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக நகர செயலாளர் வாரை.
பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்:-தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்,தியாகபாரி,மாநில விவசாய தொழிலாளர்கள் அணி துணைசெயலாளர் இரா.சங்கர்,
நகர மன்ற உறுப்பினர் வரதராஜன்,மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

















