மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 148 அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு:- மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள், நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர்களின் பணிக்கொடையினை ஆய்வு செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 148 அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கான ஆண்டு இறுதி கற்பிப்பு கொடை ஆய்வு கூட்டம் தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தொடங்கியது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குமாரவேல் தலைமை வகித்து, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்களின் பணிக்கொடையினை ஆய்வு செய்து சரிபார்த்தார். மேலும், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளின் கட்டட உறுதி, கட்டட உரிமம், சுகாதாரம், தீத்தடுப்பு ஆகிய 4 அம்சங்களுக்கான சான்றிதழ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு பிப்.11, 12 மற்றும் 13 ஆகிய 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில், வட்டார கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அமெச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்னர்.
