January 26, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இமானுவேல் சேகரனார் நினைவு தினம் : “இன்னும் 2 மாதங்களில் சிலை, மணிமண்டபம் திறப்பு” – உதயநிதி ஸ்டாலின்

by Priscilla
September 11, 2025
in News
A A
0
இமானுவேல் சேகரனார் நினைவு தினம் : “இன்னும் 2 மாதங்களில் சிலை, மணிமண்டபம் திறப்பு” – உதயநிதி ஸ்டாலின்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ராமநாதபுரம் :
சமூகநீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று பரமக்குடியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பரமக்குடியில் உள்ள நினைவு இடத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஊடகங்களுக்கு பேசிய உதயநிதி ஸ்டாலின்,
“தியாகி இமானுவேல் சேகரனாருக்கு 2 மாதங்களில் சிலையும் மணிமண்டபமும் திறக்கப்படும். பரமக்குடியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைக்கும் பணி 95% நிறைவடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

நினைவு தினத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் பி.என்.எஸ்.எஸ். 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் தலைமையில் 1 ஐஜி, 4 டிஐஜிக்கள், 24 எஸ்பிக்கள், 32 ஏடிஎஸ்பிக்கள், 70 டிஎஸ்பிகள் உட்பட மொத்தம் 7,435 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட 161 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வாகனங்களில் மேற்கூரையில் ஏறி பயணிக்கக் கூடாது என்றும், நினைவிடத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிமுகவிற்கு தடைவிதிப்பு

நினைவு தினத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுக சார்பில் யாரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்க முடியாது என தேவேந்திர பண்பாட்டு கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், இவ்விஷயத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. மீறி வருகை தரும் பட்சத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என அந்த கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Tags: dmkEmanuel SekaranarMEMORIAL DAYmk stalinUdhayanidhi Stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“உதயநிதி சொன்னது நிஜம்.. எடப்பாடி இருந்தால் அதிமுக ஆட்சி கனவு தான்” – டிடிவி தினகரன்

Next Post

தூய்மைப் பணியாளர் வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Related Posts

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
News

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு
News

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி
News

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை
News

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026
Next Post
தூய்மைப் பணியாளர் வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தூய்மைப் பணியாளர் வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

January 19, 2026
மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

December 8, 2025
தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகம் பெய்த கோடை மழை

June 1, 2025
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

0
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

0
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

0
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

0
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026

Recent News

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.