படிப்பு தான் என் கனவே! கராத்தேவ்ல பிளாக் பெல்ட், பள்ளி மாணவி கதறி அழுது பேட்டி, மகள் அழுவதை பார்த்து தாய் கதறல்

படிப்பு தான் என் கனவே! கராத்தேவ்ல பிளாக் பெல்ட்!நான் வாங்கிய மெடல் வைக்க கூட எங்களுக்கு இடம் இல்லை! சிஎம் சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க! அப்பா இறந்துட்டாரு வீடு இல்லமல் நிற்கதியா நிக்கிறேன் பள்ளி மாணவி கதறி அழுது பேட்டி! மகள் அழுவதை பார்த்து சின்னபிள்ளை போல தாய் கதறல்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய முக்கனூர் ஊராட்சி தலையாட்டி வட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் இறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்தார் இவருக்கு சபியா (31) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி தர்ஷினி(14), லோசினி(13), கோகுல்(10), என்ற இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன.

மேலும் இவர்கள் அதே பகுதியில் உள்ள ஏரி அருகாமையில் பெருமாள் குடும்பத்தினர் சிறியதாக வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பெருமாள் மது போதைக்கு அடிமை எனவும் தெரிகிறது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது கீழே விழுந்து தலையில் பலத்த காயும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெருமாள் இறந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு செய்த கனமழையின் காரணமாக பெருமாள் கட்டி வைக்கப்பட்டிருந்த குடிசை வீடு இடிந்து விழுந்துள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில் வீடும் இல்லாமல் தவித்து வந்த சபியா மற்றும் அவருடைய பிள்ளைகளை பார்த்து பெருமாளின் அத்தை தனக்கு சொந்தமான இடத்தில் தற்போதைக்கு மட்டும் குடிசை வீடு கட்டிக் கொள்ளுங்கள் ஆனால் கூடிய விரைவில் தனியாக வீடு கட்டிய பின்பு இங்கிருந்து சென்று விட வேண்டும் என தற்போதைக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.

பெருமாள் உயிரிழந்த பின்பு அவருடைய குடும்பம் எந்த ஒரு வருமானம் இல்லாமல் மிகவும் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் சபியா கூலி வேலைக்கு சென்று தனது மூன்று பிள்ளைகளையும் கவனித்து வரும் நிலையில் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏழ்மையிலும் தனது கனவை கைவிடாத சபியாவின் முதல் பிள்ளையான தர்ஷினி புதுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது பத்தாம் வகுப்பு செல்ல உள்ளார்.

மேலும் இவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளார் மேலும் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று பல சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். மேலும் இவர்கள் வாழ்ந்து வரும் சிறிய அளவிலான குடிசையில் மெடல்களை கூட வைக்க உன் கூட இடமில்லை

மேலும் இந்த குடிசையிலே தாய் உட்பட 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருகின்றனர் அதேபோல சாமான்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைக்கக்கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் தற்போது வாழ்ந்து வரும் இடம் கூட அவர்களுக்கு சொந்தமான இடமில்லை எனவே தமிழக முதல்வர் எங்களுக்கு இருக்க இடமும் மேலும் வீடு கட்டி தரவும் வேண்டும் என கண்ணீர் மல்க கதறி அழுது கோரிக்கை வைத்தனர்.

Exit mobile version