சீர்காழி அருகே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு வைக்கும் இஸ்லாமியர் மக்களுக்கு அதிகாலை உணவு

சீர்காழி அருகே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு வைக்கும் 2 ஆயிரம் இஸ்லாமியர் பெருமக்களுக்கு வீடு வீடாக சென்று இளைஞர்கள் அதிகாலை உணவு வழங்கப்பட்டு வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பதை கடமையாக செய்கின்றனர். அதன் படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் அதிகாலையில் சஹர் உணவு எனும் உணவை உட்கொண்டு நோன்பை கடைபிடிக்கின்றனர்.இந்நிலையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு டாட்டா ஏசியில் ஏற்றி தாங்கள் வீடுகளில் சென்று சஹர் உணவு தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று உணவு வழங்கும் பணியை மேலச்சாலை இளைஞர்கள் செய்து வருகின்றனர். மேலும் பள்ளிவாசலில் சிறுவர் முதல் பெரியவர்கள் உணவு சாப்பிட்டனர்

Exit mobile version