ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகையா..?

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இந்தநிலையில் வைகாசி மாத பூஜை நாட்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஜனாதிபதியின் வருகை குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி கேரளா வர உள்ளதாக கேரள அரசுக்கு தற்போது அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

Exit mobile version