மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வன்னியர் மகளிர் பெருவிழா நடைபெறுகிறது இதனை முன்னிட்டு விழா நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறும் பொழுது;
பூம்புகாரில் இது போன்ற மாநாடு 13 முறை நடந்துள்ளது. சற்று இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மகளிர் மாநாடு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பெண்மையைப் போற்றும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு நடத்திய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.
அன்புமணி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். பாமக எந்த அணியோடு சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் , மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய வெற்றியை பெறும். என்று கூறினார் மேலும் பாமகவில் தற்பொழுது நிலவும் குழப்பம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறிய அவர் தொண்டர்களுக்குள் குழப்பமே இல்லை. என்று தெரிவித்தார்.
அன்புமணி மாநாட்டில் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு போக போக தெரியும் என பாடல் மூலம் பதில் தெரிவித்தார். திமுகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கு பத்து காக்கா பறந்தது அதில் ஐந்து காக்கா வெள்ளை காக்கா அதுதான் சொல்லி இருக்கும் என நினைக்கிறேன் என கூறினார்.
திமுகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கு பத்து காக்கா பறந்தது அதில் ஐந்து காக்கா வெள்ளை காக்கா அதுதான் சொல்லி இருக்கும் என நினைக்கிறேன் என கூறினார். கோவில் நிலம் அதிகமாக இருந்தால் கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை.