பட்னாவில் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? – ஸ்டாலின்!

மஹாராஷ்டிராவில் மராத்தி மொழியை தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற ஃபட்னவிஸின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என்று பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ “மூன்றாவது மொழியாக இந்தியைத் திணித்ததற்கு பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இப்போது அங்கு மராத்தி மட்டுமே கட்டாயம் என்று கூறுகிறார்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக பொதுமக்கள் பரவலாக கண்டனம் தெரிவித்ததால், அவர் அடைந்துள்ள அச்சத்தின் வெளிப்பாடே இது..

மாண்புமிகு பிரதமரும் கல்வி அமைச்சரும் இந்த விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

Exit mobile version