திருவாரூர் நகர பகுதியில் இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அடிக்கல் நாட்டினார்கள்.
திருவாரூர் பிப் 05-திருவாரூர் மாவட்டத்தில் நெஞ்சாலைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.14.06 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் – கூடலூர் மைசூர் சாலை (திருவாரூர் நகர பகுதியில்) கி.மீ.25/4 – 26/8 வரை இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் பணிகளுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அடிக்கல் நாட்டினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது…
திருவாரூர் மாவட்டத்தில் நெஞ்சாலைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.14.06 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் – கூடலூர் மைசூர் சாலை (திருவாரூர் நகர பகுதியில்) கி.மீ.25/4 – 26/8 வரை இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் பணிகளுக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இரண்டு சிறுபாலங்கள் அகலப்படுத்துதல், ஒரு சிறுபாலம் திரும்ப கட்டுதல், 620 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுதல், 1.40 கி.மீ. நீளத்திற்கு மைய தடுப்பு கட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் 8 மாதத்திற்குள் முடிவுடையும். இச்சாலை தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லக்கூடிய பயணிகளுக்கு இச்சாலை பயனுள்ளதாக அமையும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா, திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், கோட்டப்பொறியாளர் வீரப்பன், உதவி கோட்டப்பொறியாளர் மாரிமுத்து, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், உதவி பொறியாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
