திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி மற்றும் 468 கிராம் தங்கம் செலுத்திதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 28 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் ரூ. 1.36 கோடி காணிக்கையாக செலுத்தியதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் .

அந்த வகையில் உண்டியல்களில் நகை. பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். கடந்த 28 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் கோயில் ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் இணைந்து 100க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 34 லட்சத்து 07 ஆயிரத்து 459 ரூபாய் ரொக்கமும், திருப்பணி காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் 760 ரூபாய் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து 219 ரூபாய் ரொக்கம், 468 கிராம் தங்கம், 13,890 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

Exit mobile version