மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவால் பயனடைந்தவர்களே எம்எல்ஏ சீட் கிடைக்காததால் கட்சி பொறுப்பை விட்டு விலகி தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக செயல்படுவதாக அதிமுக அம்மா பேரவை துணை செயலாளர் மதன் குற்றசாட்டு:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் பாரதி, ஒன்றியசெயலாளர் வி.ஜி.கே செந்தில்நாதன், அம்மா பேரவை இணைசெயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உழைத்தவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதுதகுறித்து இன்று மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் மாவட்ட அதிமுக அம்மா பேரவை துணை செயலாளர் மதன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத்தொகுதிகளில் பூம்புகார், சீர்காழி தொகுதிகளில் அதிமுகவும், மயிலாடுதுறை பாமகவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதி பாமகவிற்கு ஒதுக்கியதற்கு அதிருப்தி அடைந்த பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மண்டல பொறுப்பாளர் ஓ.எஸ்.மணியன் மீது பல குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை இரட்டைஇலை போட்டியிட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். ஆனால் கடும்போராட்டத்திற்கு பிறகுதான் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்பது உண்மை. வேண்டுமென்று பாமகவிற்கு ஒதுக்கிவிட்டதாக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். கட்சி தலைமையிடம் கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி கேட்கும்போது தலைமை கூட்டணிக்கு ஒதுக்குகிறது. சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ.பாரதிக்கு 3 முறை எம்எல்ஏ வாய்ப்பு வழங்கப்பட்டது, 2011 ஒன்றியக்குழு தலைவராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 2016ல் பாரதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். வாய்ப்பை பெற்றவர்கள் இந்த முறை சீட்டு வழங்கவில்லை என்றால் துரோகி என்பார். 2001ல் சந்திரமோகனுக்கு வாய்ப்பு கொடுத்தபோது திருவெண்காடு பகுதியில் கட்சி கொடிகம்பத்தை சேதப்படுத்தி, உழைத்தவர்களுக்கு ஒரு தொகுதிகூட இல்லை ஊழல் ராணிகளுக்கு 4 தொகுதியாக என்று போஸ்டர் ஒட்டியவர் பாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் விஜிகே செந்தில்நாதன் ஆகியோர் ஏதாவது குழப்பதை ஏற்படுத்த வேண்டுமென்று நினைக்கிறார்கள். செந்தில்நாதனுக்கு அம்மாபேரவை செயலாளர், நகர செயலாளர், ஊராட்சிமன்ற தலைவர், கூட்டுறவு வங்கி செயலாளர், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பொறுப்பு ஆகியவற்றை அதிமுக இயக்கம்தானே கொடுத்தது. நான்கரை ஆண்டுகாலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடிகளை செந்தில்நாதன் கொடுத்தார் என்பது எங்களுக்குதான் தெரியும். அதிமுக இயக்கம் எங்கேயும் யாரையும் விட்டுகொடுக்கவி்ல்லை அவர்களது மரியாதை, தரத்தை அவர்களே குறைத்துகொண்டுள்ளார்கள். தோல்வியை தளுவும் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக விஜிகே செந்தில்நாதன் குற்றச்சாட்டுக்கு மே 4ம் தேதி விடைகிடைத்துவிடும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்.இயக்கத்திற்கு உண்மையாக, பற்று உள்ளவர்களாக இருப்பதாக கூறிய செந்தில்நாதன் பனையூர் வீட்டுகதவை தட்டி பூம்புகார் தொகுதியில் போட்டியிட வாய்ப்புகேட்டார். வாய்ப்பு கிடைக்காததால் பத்திரிக்கையாளரை சந்தித்து குறைகூறுகிறார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 25 லட்சம் ரூபாய் கடனாக பெற்று திரப்பி தரவில்லை என்று கூறும் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன் ஆதாரம் இல்லாமல் குற்றசாட்டை முன் வைக்கிறார் என்றார்.
மயிலாடுதுறைADMK-வால் பயனடைந்தவர்களே MLA சீட் கிடைக்காததால் துணை செயலாளர் மதன் குற்றசாட்டு
