850 பெண் பிள்ளைகள் கல்வி பயிலும் கட்டிட வளாகத்திற்குள் இருக்கும் வட்டார வளமையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை

பேச மறுக்கும் பெண் பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும் வட்டார வளமையத்தால் எங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 850 பெண் பிள்ளைகள் கல்வி பயிலும் கட்டிட வளாகத்திற்குள் இருக்கும் வட்டார வள மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பெற்றோர்கள் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பார்சம்பெட் பகுதியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 850 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்வி கட்டிட வளாகத்திற்கு மையத்தில் வட்டார வள மையம் இயங்கி வருகிறது. இந்த வட்டார வள மையத்திற்கு வருகின்ற அலுவலர்கள் காலை 11 மணிக்கு மேல் காலதாமதமாக வருவதாலும் பல நேரங்களில் பள்ளியின் நுழைவாயில் கதவு மூடப்படாமல் திறந்து வைத்திருப்பதாலும் வட்டார மைய அலுவலகத்திற்கு வருவதாக கூறி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் வாலிபர்கள் மற்றும் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து காரணமே இல்லாமல் நீண்ட நேரம் காத்திருந்து பெண் பிள்ளைகளுக்கு ஆசை வார்த்தை கூறி இலவச பொருட்களை கொடுத்தும் மொபைல்களை கைமாற்றம் செய்தும் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டால் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை வருகின்ற நபர்கள் வட்டார மைய அலுவலகத்திற்கு வருகிறார்கள் என்று தட்டிக் கழித்து பேசுகிறார். ஆசை வார்த்தை குறி பெண் பிள்ளைகளை மயக்கி இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் ஒருவேளை தங்கள் பிள்ளைகளை பேசவில்லை என்கிற காரணத்திற்காக உணவு கொடுக்கிறோம் என்று கூறி அதில் விஷயம் கொடுத்து வைத்து விட்டால் நாங்கள் என்ன செய்வது என்று பதற்றத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான் அந்த வட்டார மைய அலுவலகத்தை பள்ளி வளாகத்திற்குள் வெளியே வைக்க வேண்டும் என்பது மட்டுமே அதை கடந்த மூன்று நான்கு வருடங்களாக கூறி வருகிறோம் ஆனால் எந்த நடவடிக்கையும் துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்கவில்லை இனிமேலும் காலதாமதம் செய்தால் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி 850 குழந்தைகளின் பெற்றோர்களும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version