விழுப்புரம்
கரும்பு விலை டன்னுக்கு வயல்வெளி விலையாக 5550 ரூபாயை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் ஊக்கத்தொகை டன்னுக்கு 740 *ரூபாய் மாநில அரசு வழங்க வேண்டுமென கரும்பு விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
விழுப்புரம் கரும்பு விவசாயிகள் பேரவைக்கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க பேரவை தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கரும்பு விவசாய சங்க தலைவர் பாண்டியன் கரும்பு விலை டன்னுக்கு வெட்டும் கூலி வாகன வாடகை இல்லாமல் வயல் விலையாக 5550 ரூபாயாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிற ஊக்கத்தொகை டன்னுக்கு 349 லிருந்து 740 ஆக உயத்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
பின் தங்கிய நிலையில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கதொகையை அறிவிக்க வேண்டும், விவசாயிகள் அனைத்து ரக கரும்புகளையும் பயிரிட ஆலை நிர்வாகத்தினர் பரிந்துரைக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
