மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:- சென்னையில் 6-வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்:-

தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டு எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,000 செவிலியர்கள் 10 ஆண்டுகளாக இன்னமும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பணி நிரந்தரம் செய்வதாக அரசு அறிவித்திருந்த நிலையில், பணி நிரந்தரம் செய்யப்படாததால் ஒப்பந்த செவிலியர்கள் சென்னையிலும், மாநிலம் முழுவதும் மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவடத்தில் சுமார் 200 ஒப்பந்த செவிலியர்கள் உள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியர்களை தவிர்த்த மற்ற ஒப்பந்த செவிலியர்கள் 30பேர் இன்று மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் 6-வது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version