விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில், 72வது ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சங்கம், மற்றும் வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள், பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இங்கு, ஆண்களுக்கு மெதுவாக மோட்டார் சைக்கிளிலும் செல்லும் பந்தயமும், பெண்களுக்கு கோல போட்டியும் நடந்தது. ஆண்கள் 100 பேரும், பெண்கள் 60 பேரும் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை கூட்டுறவு விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, துணை பதிவாளர் சிவபழனி ஆகியோர் மேற்பார்வை செய்து, சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 17 ம் தேதி நடைபெறவுள்ள கூட்டுறவு வார விழாவில், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதில், துணை பதிவாளர் வெங்கட்பிரபு, சார் பதிவாளர் சிவபானு, ஒருங்கிணைப்பாளர் மணிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
