கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலை : விவாகரத்து தகராறு காரணமாக கணவர் சூழ்ச்சி !

கோவை: தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்னைகள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் மனைவி கொலை வழக்கு புதிய திருப்பம் எடுத்துள்ளது. கடந்த மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட மகேஸ்வரி வழக்கில், முதலில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர் சுரேஷ் தனிப்பட்ட கோபத்தில் செய்த குற்றமாக கருதப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கொலையை திட்டமிட்டு செய்திருக்க சரவணனே தூண்டியிருந்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து சரவணனும் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஊராட்சி தலைவரின் குடும்பத்தில் சிக்கல்கள்

பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணன் (51), மகேஸ்வரி (46) என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவரினார். கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே குடும்ப தகராறுகள் அதிகரித்ததுடன், சரவணன் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

15 ஆண்டுகளாக வீட்டிற்கு ஓட்டுநராக பணியாற்றி வந்த சுரேஷ் (49), அக்டோபர் 28 அன்று மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில், கத்திக் குத்தி கொலை செய்துவிட்டு, தானே வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஆரம்ப விசாரணையில், மகேஸ்வரி திட்டியதால் கோபத்தில் கொலை செய்ததாக அவர் கூறினார்.

ஆனால் உண்மையில்..? விசாரணையில் பெரிய திருப்பம்

போலீசார் தொடர்ச்சியாக சுரேஷை விசாரித்தபோது சுவாரஸ்யமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. சரவணனின் திருமண வாழ்க்கை முறிந்த நிலையில், பலமுறை விவாகரத்து கேட்டும் மகேஸ்வரி சம்மதிக்காததால் மனவருத்தத்தில் இருந்ததாக தெரியவந்தது.

இதனிடையே, மனைவியை கொலை செய்ய சுரேஷை தூண்டியதே சரவணன் என்பதும் போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

காவல்துறையினர் கூறியதாவது:
“மனைவியை கொலை செய்தால் வழக்கு செலவை பார்த்துக்கொள்கிறேன். மேலும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள செங்கல் சூளையை உனக்கு சொந்தமாக்கித் தருவேன்” என்கிற வாக்குறுதியை சரவணன் சுரேஷுக்கு வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதன்படி, திட்டமிட்டபடி சுரேஷ் மகேஸ்வரியை கொலை செய்து, பின்னர் தனிப்பட்ட கோபத்தில் செய்த குற்றம் என நாடகமாடியதாக போலீசார் தெரிவித்தனர்.

கணவர், ஓட்டுநர் இருவரும் கைது

விசாரணையில் சரவணன் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டதால், சுரேஷுடன் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கோவை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version