ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள் ;ஒப்பீடே குழப்பத்தின் வேர் எனவும் எந்த குழந்தையும் இன்னொரு குழந்தையைப் போல இருக்க முடியாது.சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல; சமூகத்திற்கு ஒரு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி கூறினார்.
விழுப்புரம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 31-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்படக் கலைஞரும், இயக்குநருமான சமுத்திரக்கனி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடைய உரையாற்றினார்.
மேடையில் பேசிய அவர்: இன்றைய சமூகத்தில்,
பல பெற்றோர்களுக்கு
“என் பிள்ளை அந்த பிள்ளை மாதிரி இல்ல…
இந்த பிள்ளை மாதிரி இல்ல…”
என்ற ஒரு நிரந்தரமான வருத்தம் இருப்பதாக அவர் கூறினார்.
அதேபோல்,
மாணவர்களிடமும்
“நான் அவனை மாதிரி இல்ல…
இவனை மாதிரி இல்ல…”
என்ற ஒரு குழப்பம் தொடர்ந்து இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர்,
யாரும் யாரை மாதிரியும் இருக்க முடியாது என்றும்,
எந்த குழந்தையும் இன்னொரு குழந்தையைப் போல இருக்கவே முடியாது என்றும் கூறினார்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது,
ஒவ்வொரு குழந்தையும் ஸ்பெஷல் என்று வலியுறுத்திய அவர்,
ஒரு குழந்தைக்கு தெரிந்த விஷயம் இன்னொரு குழந்தைக்கு தெரியாமல் இருக்கலாம்,
அதேபோல் மற்றொரு குழந்தைக்கு தெரிந்தது இவருக்கு தெரியாமல் இருக்கலாம் என்றார்.
அதனால்,
எந்த குழந்தையையும்
எந்த குழந்தையோடும்
ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்,
ஒப்பிடக் கூடாது என்று
பெற்றோர்களுக்கும் சமூகத்துக்கும் அவர் முக்கியமான வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
நாங்கள் வெறும் சினிமா,
பாட்டு,சண்டை மட்டுமே செய்யும் கூட்டம் அல்ல என்றும்,
இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும்,ஒரு பயன் இருக்க வேண்டும் என்பதற்காகவே உழைக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இன்றைக்கு இல்லையென்றாலும்,
10 வருடங்கள் கழித்து,
20 வருடங்கள் கழித்து
அந்த படைப்பை எடுத்துப் பார்த்தாலும்,
அது ஏதாவது ஒன்றை பேச வேண்டும் என்பதே
எங்களின் நோக்கம் எனவும் கூறினார்.
இத்தகைய சமூகப் பொறுப்புடன் கூடிய சிந்தனையோடு
படைப்புகளை உருவாக்கும் இயக்குனர்களில்
நானும் ஒருவராக இருப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் ஜெயேந்திரா பள்ளியில்
31-வது ஆண்டு விழா ( 31st Jayeandrians Day) கோலாகலம்
விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 31-வது ஆண்டு விழா (Jayeandrians Day) சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்படக் கலைஞரும், இயக்குநருமான சமுத்திரக்கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தார்.
இவ்விழாவில் 1,500-க்கும் மேற்பட்ட ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர் இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் திரு. J. பிரகாஷ், செயலாளர் திரு. P.K.. ஜனார்த்தனன் மற்றும் மகாலட்சுமி குழும நிர்வாக இயக்குநர்கள் வெங்கடேஷ், ராஜேஷ் ,மதன்குமார், அஸ்வின் குமார், பிரவீன்குமார், வருணகுமார், தருண்குமார், வழக்கறிஞர்கள், குடும்ப நண்பர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இவ்விழாவின் இறுதியில் நமது ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் மீண்டும் ஒருமுறை ”We are the best” என்பதை நிரூபித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர் என பலர் கூறினர்.விழுப்புரம் ஜெயேந்திரா பள்ளியில்
31-வது ஆண்டு விழா ( 31st Jayeandrians Day) கோலாகலம்
விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 31-வது ஆண்டு விழா (Jayeandrians Day) சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்படக் கலைஞரும், இயக்குநருமான சமுத்திரக்கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தார்.
இவ்விழாவில் 1,500-க்கும் மேற்பட்ட ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர் இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் திரு. J. பிரகாஷ், செயலாளர் திரு. P.K.. ஜனார்த்தனன் மற்றும் மகாலட்சுமி குழும நிர்வாக இயக்குநர்கள் வெங்கடேஷ், ராஜேஷ் ,மதன்குமார், அஸ்வின் குமார், பிரவீன்குமார், வருணகுமார், தருண்குமார், வழக்கறிஞர்கள், குடும்ப நண்பர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இவ்விழாவின் இறுதியில் நமது ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் மீண்டும் ஒருமுறை ”We are the best” என்பதை நிரூபித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர் என பலர் கூறினர்.

















