தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 7 நாள் காலம் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
முதலில் ஜெர்மனியில் 3 நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பின்னர், செப்டம்பர் 1ஆம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டன் புறப்படுகிறார். அங்கு உள்ள கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் “ஈவெரா” திரைப்படத்தை திறந்து வைக்கிறார்.
அதேபோல், லண்டனில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார். இந்த பயணத்தின் போது, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதலீடு தொடர்பான ஆலோசனைகள் நடைபெறவுள்ளதுடன், சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, தனது எக்ஸ் தள பதிவில் முதல்வர் ஸ்டாலின்,
“வலுவான மாநிலங்களே வலிமையான ஒன்றியத்தைக் கட்டமைக்கின்றன. மத்திய–மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழகம் அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் இணையதளத்தில் தங்கள் கருத்துகளை பகிர வேண்டுமென அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணர்வினை இணைந்து புதுப்பிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்