செங்கல்பட்டு கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி.
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், இரண்டு நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணிக்கின்றனர். இந்த பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிபட்டனர்.
குறிப்பாக செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் உள்ளிட்ட பேருந்து சாலைகளில் அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கத்தை விட கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது
இதனால் வெயில் தாக்கம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
