மயிலாடுதுறை சேந்தங்குடி துர்கா பரமேஸ்வரி ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடியில் பழமை வாய்ந்த துர்கா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை காவல் தெய்வங்களில் ஒன்றாக போற்றப்படும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை செய்யப்பட்டது இதனை அடுத்து பக்தர்கள் அம்மனை ஊர்வலமாக தூக்கி வந்து தேரில் அமர்த்தினர். தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் வீதி உலாவாக எழுந்தருளினார்.அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மாவிளக்கு மாவு தீபம் ஏற்றி குத்து விளக்கு ஏற்றி பழ வகைகளை வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். விடிய விடிய நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
