முன் விரோதம் காரணமாக தவெக குமரி கிழக்கு மாவட்ட மயிலாடி பேரூர் செயலாளர் சகாய ஜோசப் விஜய் வீட்டில் இருக்கும் போது வீடு புகுந்து தாக்கிய 6 பேர் மீது அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு. தவெக நிர்வாகியை தாக்கும் பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி காமராஜர் நகரை சேர்ந்தவர் சகாய ஜோசப் விஜய் (வயது33) இவர் கருங்குளம் பகுதியில் கல் பட்டறை நடத்தி வருகிறார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் குமரி கிழக்கு மாவட்ட மயிலாடி பேரூர் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கும் மயிலாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் (50) தொழில் பிரச்சனை, மற்றும் பண பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு சகாய ஜோசப் விஜய் வீட்டில் இருந்த போது முருகேசன் மற்றும் அவருடன் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் விஜய் வீட்டிற்கு வந்து அத்து மீறி நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு விஜயை பயங்கரமாக இருந்தது தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த விஜய் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து சகாய ஜோசப் விஜய் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அஞ்சு கிராமம் போலீசார் முருகேசன் மற்றும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சகாய ஜோசப் விஜயை வீடு புகுந்து தாக்கும் பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
















