மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்:- அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை:-
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின் மாவட்ட அமர்வு நீதிமன்றம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட ஏழு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. 300 க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை நீதிமன்ற பணிகள் துவங்கிய நிலையில் இமெயில் மின்னஞ்சல் மூலமாக மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர், உள்ளிட்ட கருவிகள் கொண்டு நீதிமன்றத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.
