நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை,கரூர் MP-களை தகுதி நீக்கம் செய்யக்கோரி BJPநிர்வாகி ONLINE புகார்

நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை, கரூர் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு மயிலாடுதுறையில் இருந்து பாஜக நிர்வாகி ஆன்-லைன் புகார்:-

நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட மயிலாடுதுறை எம்.பி. சுதா, கரூர் எம்.பி ஜோதி மணி ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு மயிலாடுதுறையில் இருந்து பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் மோடி.கண்ணன் என்பவர் இன்று ஆன்லைன் மூலம் புகார் அனுப்பினார். அந்த புகார் மனுவில், பிப்ரவரி 4-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களான ஜோதிமணி மற்றும் சுதா உள்ளிட்டோர் ரகளையில் ஈடுபட்டு அவரை வழிமறித்தனர். இந்த நடத்தை அவர்கள் நாடாளுமன்றப் பொறுப்பேற்றபோது எடுத்துக்கொண்ட பதவியேற்பு உறுதிமொழியை நேரடியாக மீறுவதாகும். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மரபுகளையும் அவமதித்துள்ள எம்பிக்களை இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த புகாரை குடியரசு துணைத் தலைவருக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

Exit mobile version