சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் போராக வெடிக்கும் அபாயத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு எதிரான சைபர் தாக்குதல்களும் தவறான தகவல் பரவலும் அதிகரித்து வருகின்றன. அரசு துறைகள் மட்டுமின்றி, வணிகங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களும் ஆபத்தில் உள்ளனர். அவசர எச்சரிக்கைகள் அல்லது அரசு ஆலோசனைகள் என்ற கோர்வையில், ஃபிஷ்ஷிங் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version