மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சிறப்புவிழாவில், தமிழ்நாடு அரசின் தேர்வுகள் மூலம் வெற்றிபெற்ற நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு உடற்கல்வி, தையல் மற்றும் இசை ஆசிரியர் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட 45 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 7 தட்டச்சர்களுக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த ஆணைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வழங்கி, நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக திறமையான ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும், புதிய நியமனங்கள் மாணவர்களின் உள்திறன் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.