வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ரூ.3 ஆயிரத்திற்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் கார்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது, என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ;
1 வருடத்திற்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி பாஸ் வாங்கி கொண்டால், நாடு முழுவதும் 1 வருடத்திற்கு அல்லது 200 முறை சுங்கச் சாவடிகளைக் கடந்து பயணம் செல்லும் திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலாகிறது. வணிக வாகனங்கள் அல்லாத தனி நபர் வாகனங்களுக்கு இந்த பாஸ் செல்லும்.
கார்,ஜீப், வேன் இது மாதிரியான தனிநபர் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே பாஸ் பொருந்தும். 60 கி.மீ-க்குள் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. வருடாந்திர பாஸ் திட்டம், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும்.
இதன் நோக்கும் என்னவென்றால், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சுங்கச்சாவடிகளில் உள்ள பிரச்சனைக்களை நீக்குவதன் மூலமும் கோடிக்கணக்கான பொதுமக்களுக்கும், தனியார் வாகன டிரைவர்களுக்கும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.