கோவை :
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) 11 ஆண்டுகால ஆட்சிச் சாதனைகள் குறித்து, கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில், 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் பாஜக அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும், பொது சிவில் சட்டத்தை தவிர மற்ற அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் தீர்மானிப்பார்கள். எனது பார்வையில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்; இது கட்சி வளர்ச்சிக்கேற்றதாக இருக்கும்,” என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என உங்களது நிலைபாடா ? அதிமுக தலைவர்களின் பெயரை தவிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்,
“நான் பாஜக தொண்டன். உயிர் இருக்கும் வரை கட்சிக்காக உழைப்பேன். ஆனால் கட்சி முடிவுகளை நான் மதிக்கிறேன். சில சமயங்களில் கட்சி எடுத்த முடிவுகளுக்கு நான் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். அதற்குத்தான் கட்சி ஒழுக்கம்.”
என்றும் அவர் சற்றே கொந்தளிக்கவேண்டியவிதமாக பதிலளித்தார்.
மேலும், “பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா ?” என்ற கேள்விக்கு,
“எங்க கூட்டணி, கூட்டாட்சி என்கிறதில்லை. இது பாஜக ஆட்சி தான். எங்கள் தலைவர்கள் எது முடிவு செய்கிறார்களோ, அதற்கே நாங்கள் ஒத்துழைக்கிறோம்,”
என தெரிவித்தார். அதனுடன்,
“நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பகிர நேரம் இன்னும் வரவில்லை. அதற்கான சரியான தலைவர்கள் பதிலளிப்பார்கள். இதுவரை, எனது கருத்துகள் என் இதயத்துக்குள் இருக்கட்டும்,”
என்று கூறியதன் மூலம், அதிமுக தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், தனது நிலைப்பாட்டை விவகாரமாக மறைத்தார்.