அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து தர்ணா போராட்டம்.
திருவாரூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தின் காந்தி பெயரை மாற்றி விபி ஜி ராம்ஜி என பெயர் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மாவூர் கடை தெரு பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் என்.இடும்பையும் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா முன்னிரை வகித்தார்.
போராட்டத்தில், நூறு நாள் வேலைத்திட்ட பெயர் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும், சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும், நூறு நாள் வேலைக்கான நிதியை குறைக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களில் எழுப்பப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

















