பொங்கலுக்கு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி..!

பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும் – நிர்வாக அதிகாரி அனுமந்தாராவ் பேட்டி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை எய்ம்ஸ் ப்ரெசிடெண்ட் பிரசாந்த் லவன்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தாராவ், விருதுநகர் எம்பி மாணிக் தாகூர், தென்காசி எம் பி ராணி ஸ்ரீகுமார், அதிமுக ராஜ்யசபா எம்பி சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ், மத்திய துணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் 8 பேர் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எய்ம்ஸ் நான்காவது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் வாடகைக்கு கட்டிடங்கள் எடுக்கக்கூடிய சூழ்நிலை இருந்ததால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடக்கக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது .தற்போது மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், வரும் 2026 ஜனவரி மாதம் தை பொங்கல் தினத்தன்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி புதிய கட்டிடத்தில் செயல்படும்.

இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான ஆய்வகங்கள் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் முதற்கட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 150 படுக்கைகளுடன் அனைத்தும் செய்து முடிக்கப்படும்.

2027 ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று செயல்படுத்த தொடங்கும் எனவும் மாதந்தோறும் கட்டிடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிடும்படி ஒப்பந்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம், என்று எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ் பேட்டி.

Exit mobile version