பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் விநாயகர் முருகன் ஆலயங்களில் வழிபாடு நடத்தி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்:-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது முறையாக பூம்புகார் தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிடும் வேட்பாளர் பவுன்ராஜ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வந்த நிலையில் வேட்பாளர் பவுன்ராஜ் இன்று தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தை துவங்கினார். செம்பனார்கோவில் குமரன் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு செங்கழுநீர் விநாயகர் ஆலயத்தில் தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். வாக்கு சேகரிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர்கள் அதிமுக பொதுச் செயலாளர் படங்களுடன் இரட்டை இலை சின்னத்துடன் உள்ள பிரத்தியேக திறந்தவெளி வாகனத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு கும்பிட்ட கரங்களுடன் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செம்பனார்கோவில் கடைவீதியில் மளிகை கடை காய்கறி கடை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு நடந்து சென்று தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்திலும் நடந்தும் மாறி மாறி இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சியான பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, அதிமுக ஒன்றிய செயலாளர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் புடைசூழ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பூம்புகார் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் ADMK வேட்பாளர் பவுன்ராஜ் வாக்கு பிரச்சாரம்
