மயிலாடுதுறை குதம்பை சித்தர் நகரில் உள்ள லட்சுமி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை. ஐந்தடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள குதம்பை சித்தர் நகரில் லட்சுமி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லட்சுமி விநாயகருக்கு சந்தனம், பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து லட்சுமி விநாயகர் அலங்கரிக்கப்பட்டு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் ஆலயத்தில் 5 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
