டீ கடையில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவால் திடீர் தீ விபத்து – சாதுர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்த போலீசார்க்கு குவியும் பாராட்டு….

கோவை பந்தயசாலை காவல் நிலையம் அருகே டேன் டீ கடை செயல்பட்டு வருகிறது.இன்று மதியம் அந்த கடையில் இருந்த சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென கடையில் தீபற்றி உள்ளது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பு அருகில் இருந்த பந்தயசாலை காவல் நிலைய காவல்துறையினர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தீ அணைப்பு கருவியினை எடுத்து கொண்டு வந்து டீ கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சாதுர்த்தியமாக செயல்பட்டு டீக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்திய காவல்துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version