மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையம் அருகே ரயில்வே ட்ராகில் கடந்த 20ஆம்தேதி தீபாவளி தினத்தன்று பிறந்து இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று சாக்கு பையில் கிடந்தது. குத்தாலம் கீழக்காலணியை சேர்ந்த சேகர் என்பவர் குழந்தையை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து குத்தாலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து. நல்ல நிலையில் இருந்த பெண் குழந்தையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புதுறை அறிவுறுத்தலின்பேரில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பெண்குழந்தை பாதுகாக்கப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் உத்தரவின் பேரில். பெண் குழந்தையை தத்து கொடுப்பதற்காக இன்று மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவர் ரஞ்சித் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஆரோக்யராஜிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தார். தத்துப்பிள்ளை கேட்டு தமிழக அரசிடம் பதிவு செய்த தம்பதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகத்திடம் முன்னுரிமை அடிப்படையில் குழந்தை மாவட்ட ஆட்சியர் வாயிலாக ஒப்படைக்கப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
			















