மயிலாடுதுறையில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் பெரும் விழா

மயிலாடுதுறையில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் பெரும் விழா:- புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைபித்தன் பங்கேற்று விழா பேருரை ஆற்றினார்:-

மயிலாடுதுறையில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் பெரும் விழா நடத்தப்பட்டது. தமிழ்ச்சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைபித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாய்மொழி நாள் விழா பேருரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், தற்போது மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தும் திருவள்ளுவரின் உருவப்படத்தை மயிலாடுதுறையில் வரைந்த ஓவியர் வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு, தமிழின் முதல் புதினத்தை இயற்றிய கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் மணிமண்டபம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version