இமயமலையில் மட்டுமே பூக்கக்கூடிய பூ !

வட மொழியில் நிஷா கந்தி என்று அழைக்கப்படும் இந்த பூவானது இமயமலையில் மட்டுமே அதிகளவு பூத்து குலுங்கும் தற்போது, இந்த பூவானது கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஐஸ்வர்யா நகர் பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரது வீட்டில் இந்த பூ பூத்துள்ளது.,

இந்த பூவை பிரம்ம கமலம் எனவும் அழைக்கப்படுவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக இந்த செடி வளர்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டில் தான் இன்று முதல் முதலாக இந்த பூ மலர்வதாக வீட்டின் உரிமையாளர் குமார் தெரிவித்தார்.

மேலும் சிவனுக்கு உகந்த மலராக கருதப்படும் இந்த பூவானது பிரம்மனின் நாபி கமலத்தில் இருந்து உருவானதால், மலரின் உட்புறத்தில் பல நாகங்கள் இருப்பது போன்றும், பிரம்மன் அமர்ந்திருப்பதை போன்றும் இந்த காட்சி அளிக்கும்.

இமயமலையில் மட்டுமே பூக்கக்கூடிய இந்த பூவானது ஆண்டிற்கு ஒரு முறை இரவில் மட்டும் பூக்கும் நிலையில் தற்போது பொள்ளாச்சி பகுதியில் எங்கு பூத்திருந்த இந்த மலரில் இருந்து அதிகளவு நறுமணம் வருவதாக தெரிவித்த இந்தப் பகுதி மக்கள் இந்த பூவை ஒரு அதிசயமாகவும் ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர்

Exit mobile version