“கணபதியில் ஒரு கனவு இல்லம்!” – அடுக்குமாடி குடியிருப்பு வாங்கினால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசம்; டிஎன்சிடி-யின் அதிரடி அறிவிப்பு!

கோவையின் ரியல் எஸ்டேட் துறையில் தரம் மற்றும் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற கே.ஜி. குழுமத்தின் ஒரு அங்கமான டவுண்சிட்டி டெவலப்பர்ஸ் (TNCD) நிறுவனம், கோவை மாநகரின் இதயப் பகுதியான கணபதியில் தனது புதிய பிரீமியம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’யை (Grand City) நேற்று பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தியது. 1932-ஆம் ஆண்டு முதல் சுமார் 94 ஆண்டுகளாகத் கட்டுமானத்துறையில் தடம் பதித்து வரும் இந்த நிறுவனம், கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

கணபதி பகுதியில் நடைபெற்ற இந்தத் திட்ட அறிமுக விழாவில், டி.என்.சி.டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சனா விஜயகுமார் கலந்துகொண்டு ‘கிராண்ட் சிட்டி’ திட்டத்தின் சின்னத்தை (Logo) வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களது திட்டங்கள் எப்போதும் நகரின் முக்கிய இடங்களிலேயே அமையும். அந்த வகையில், சத்தி சாலையில் வேகமாக வளர்ந்து வரும் கணபதி – சரவணம்பட்டி ஐடி காரிடார், முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் புரோசோன் மால் ஆகிய இடங்களுக்கு மிக அருகில் இந்த ‘கிராண்ட் சிட்டி’ அமையவுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கும், குடியேற விரும்புபவர்களுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகும்” எனத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் 1, 2 மற்றும் 3 படுக்கையறை (BHK) கொண்ட வீடுகள் வாஸ்து முறைப்படி, நவீன வாழ்க்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. போதிய இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கும் வகையில் கட்டப்படும் இந்த வீடுகளில், குறிப்பாக சில 3 BHK வீடுகள் எவ்விதப் பொதுச் சுவரும் (No Common Wall) இல்லாமல் தனித்தனி வீடுகள் போன்ற பிரைவசி வசதியுடன் வழங்கப்படுகின்றன. இன்றைய கால மாற்றத்திற்கு ஏற்ப மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் (EV Charging) மற்றும் ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, உடற்பயிற்சிக் கூடம், கசீபோ அமர்வு மற்றும் பார்ட்டி லான் போன்ற சொகுசு வசதிகளும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

விலையைப் பொறுத்தவரை, 2 படுக்கையறை வீடுகள் ரூ.59.99 லட்சத்திலிருந்தும், 3 படுக்கையறை வீடுகள் ரூ.77.99 லட்சத்திலிருந்தும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இந்த அறிமுக விழாவை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் மார்ச் 8-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகையாக இலவச மின்சார இருசக்கர வாகனம் (Electric Scooter) வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் உதவி துணைத் தலைவர் யுவராஜ், மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஸ்வா உள்ளிட்ட உயர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். கோவையின் பிரதான பகுதியில் சகாய விலையில் சொகுசு வீடுகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version