சீர்காழி அருகே கொட்டாயமேடு கடற்கரையில் டால்ஃபின் இரண்டாம் வகை டால்பின் (எருமை வகை) சுமார் 08 அடி நீளம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொட்டாயமேடு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் டால்ஃபின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.இதனை அடுத்து சீர்காழி வனத்துறையினர் டால்பின் கைப்பற்றி கூர் ஆய்வு செய்தனர்,மேலும் திருமுல்லைவாசல் கடலோர காவல் குழும போலீசார் இறந்த டால்ஃபின் மீன் இந்தப் பகுதியில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
