மகளிர்களுக்கு ரூபாய் 5000 உரிமைத் தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தெருக்களில் வீடுகளுக்கு முன்பாக கலர் கோலம் விட்டு வரவேற்று நன்றி தெரிவிக்கும் பெண்கள்
தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கி வந்தது இந்நிலையில். தற்போது வரும் மார்ச், ஏப்ரல், மே மாதத்தின் உடன் கோடை சிறப்பு தொகுப்பு ரூ 2000 என மொத்தமாக ரூபாய் 5000 உரிமைத் தொகையை அந்தந்த பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு செலுத்தியது. இதனால் பெண்கள் இன்ப அதிர்ச்சியைகண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அது மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி வரும் நிலையில், பெண்களுக்கு ரூபாய் 5000 உரிமைத் தலைவர் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் பெண்கள் தெருக்களில் தங்களுடைய வீடுகளின் முன்பாக கலர் கோலமிட்டு அதனை வரவேற்று நன்றி தெரிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோலங்களை பார்வையிட்ட விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் வெற்றி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் நவநீதம் மணிகண்டன் புருஷோத்தமன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அந்த பகுதியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
