பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்…”
திருவாரூர் மாவட்டம், எட்டியலூர் பழமை வாய்ந்த செண்பகவல்லி மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்டம்..ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்..
திருவாரூர் அருகே உள்ள எட்டியலூர் பகுதியில் உள்ள பல நூறு ஆண்டுகள் ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதையான அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் கோவில சித்திரை திருவிழா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில்.. வெளிநாட்டில் இருந்தும் வெளிஊர்களிலும் சென்ற ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். த
முன்னதாக கடந்த 24.4.2026 அன்று பூரண புஷ்கலாம்பாள் சமேத சேப் பெருமாள் அய்யனார் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று.. தொடர்ந்து 26. 4 .2026 அன்று செண்பகவல்லி மாரியம்மன்- க்கு பூச்சொறிதள் நடைபெற்றது.. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் செண்பகவல்லி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது..
அதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்..
