டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவிரியில் தண்ணீர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கல்லணை வந்து சேர்ந்த காவிரி நீரை ஜூன் 15ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைத்த நிலையில் நேற்று மதியம் காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்ட எல்லை பகுதியான திருவாலங்காடு விக்ரமன் தலைப்பு நீரொழுங்கிக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து நீர்வள ஆதாரத்துறையால் வினாடிக்கு 800 கன அடி திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று நள்ளிரவு மயிலாடுதுறை துலா கட்ட காவிரியை வந்தடைந்தது.
இந்நிலையில் துலா கட்ட காவிரியில் காவிரி அன்னை வரவேற்று காவிரி துலா கட்ட பாதுகாப்பு குழு சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு காவிரி தண்ணீருக்கு அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினர்.