தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் தர்மபுர ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்,திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவில் முன் யாகசாலை அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது அதனைத் தொடர்ந்து இன்று ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகா பூர்ணா குதி செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வளம் வந்து கும்ப கலசத்தை அடைந்தது கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் தர்மபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

















