August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

by sowmiarajan
December 25, 2025
in News
A A
0
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கொண்டு வந்துள்ள பல்வேறு நிபந்தனைகள் மற்றும் மாற்றங்கள், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் மாநகரில் மூன்று முக்கிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. உழவர் சந்தை அருகில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையிலும், பழநி ரோடு பைபாஸ் பகுதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை தலைமையிலும், பொன்னகரம் பகுதியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையிலும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மாநகர செயலாளர் ராஜப்பா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஐ.பி. செந்தில்குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், கிராமப்புற மக்களின் பொருளாதாரத் தூணாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். இப்போராட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாநகராட்சி மேயர் இளமதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், காங்கிரஸ் மாநகர தலைவர் மணிகண்டன், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அன்பரசு உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆன்லைன் வருகைப் பதிவு மற்றும் நிதி ஒதுக்கீடு குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் ஏழை மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதாக அவர்கள் தங்களது உரையில் சுட்டிக்காட்டினர்.

இதேபோல் வேடசந்தூர் வட்டம் பாலப்பட்டி ஊராட்சி அழகாபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகிக்க, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிருஷ்ணன், அய்யாவு, அமிர்த கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பெரியசாமி, பாலச்சந்தர், முருகேசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பகவான், கண்ணன் உள்ளிட்டோர் மத்திய அரசின் மாற்றங்கள் அடித்தட்டு மக்களை எவ்விதம் பாதிக்கும் என்பது குறித்துப் பேசினர். திமுக நிர்வாகிகள் ஆசைத்தம்பி, செல்வம், சிவசாமி உள்ளிட்ட பலர் இந்த எழுச்சிமிக்கப் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

வடமதுரை தென்னம்பட்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம், நகர செயலாளர் கணேசன் மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த அறப்போராட்டம், மத்திய அரசுக்குத் தமிழக மக்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வேலை நாட்களை 150 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பெரும் பரபரப்பும் நிலவியது.

Tags: changes ruralEMPLOYMENTMGNREGSpolicyprotest
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பழநி பாலாறு – பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

Next Post

எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம்  திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம்  திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம்  திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.